உள்ளூர் செய்திகள்

கேரம் போட்டியை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மாநில அளவிலான கேரம் போட்டி

Published On 2023-09-16 09:53 GMT   |   Update On 2023-09-16 09:53 GMT
  • ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும்.
  • பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யா மொழி கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

கலெக்டர் தீபக்ஜேக்கப், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக போட்டி நடந்தது.

நாளை வரை போட்டி நடை பெறும்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கேரம் கழக துணை தலைவர் ராஜகோபால், செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் விக்னேஷ் செய்திருந்தனர்.

Tags:    

Similar News