நெல்லையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை
- நெல்லையில் மாதத்திற்கு ஒரு முறை மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- இன்று 37 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் மனித உரிமைகள் மீறல் தொடர் பான வழக்குகள், மனித உரிமைகள் ஆணை யத்தால் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் மாதத்திற்கு ஒரு முறை மனித உரிமை கள் ஆணையத்தால் மனித உரிமைகள் மீறல் தொடர் பான வழக்குகள் விசாரிக் கப்பட்டு வருகிறது. கடைசி யாக கடந்த மாதம் 8-ந் தேதி இந்த விசாரணை நடை பெற்றது.
இந்த மாதத்திற்கான மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பி னர் கண்ணதாசன் கலந்து கொண்டு மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரித்தார்.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற உரிமை மீறல் வழக்குகள் விசாரணை நடந்தது.
இன்று 37 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப் பட்டது. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளே விசாரணைக்கு வந்திருந்த னர். இதனால் அரசு சுற்றுலா மாளிகையில் போலீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது.