உள்ளூர் செய்திகள்

மருதமலை பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்: கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-09-08 09:27 GMT   |   Update On 2023-09-08 09:27 GMT
  • தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
  • மருதமலையில் கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை

வடவள்ளி,

கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது.

இங்கு தினமும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மருதமலை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி யாக கழிப்பிட வசதிகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் செல்கிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருசிலர் கழிவு நீர் கால்வாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு கழிவுநீர் வெளியேற வழியின்றி ரோட்டில் குள ம்போல தேங்கி நிற்கிறது.

எனவே பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் மருதமலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது மட்டுமின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மருதமலை பஸ் நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை உடனடியாக அகற்றி, பொது கழிவறையை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News