உள்ளூர் செய்திகள்

தேர்பவனி நடந்தது.

புனித அந்தோனியார் ஆலய தேர்பவனி

Published On 2023-01-04 14:40 IST   |   Update On 2023-01-04 14:40:00 IST
  • சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
  • அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனிதநீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த கருங்கண்ணியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் இந்த புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு தேர்பவனி நடை பெற்றது சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட சப்பர த்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் எம். பிரான்சிஸ் துணைத் தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் இறை மக்கள் கருங்கன்னி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் உள்ளி ட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News