சாதனை படைத்த மாணவ-மாணவிகள்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு - வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
- மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்தாண்டு 249 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவர் பாலகிஷன் 493 மதிப்பெண் பெற்று 2-வது இடம் பெற்றுள்ளார். மாணவிகள் அகஸ்தியா, பாலசவுமியா ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று 3-வது இடம்பெற்று பள்ளியில் சாதனை படைத்தனர்.
மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும், 450-க்கு மேல் 59 மாணவர்களும், 400-க்கு மேல் 118 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர்.
இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெஸ்மின் பிரித்தி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.