உள்ளூர் செய்திகள்

கலக்காசுப் பிள்ளையாருக்கு அபிஷேகம், வீதிஉலா நடந்தது.

ஐயாறப்பர் கோவிலில் கலக்காசு பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2022-09-01 09:40 GMT   |   Update On 2022-09-01 09:40 GMT
  • ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
  • பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலக்காசு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு கலக்காசு பிள்ளையார் வீதி உலா நடந்தது.

முன்னொரு காலத்தில் நடந்த ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செப்புக்காசுகளில் கும்பாபிஷேக செலவு போக மீதமிருந்த 12 மரக்கால் எனும் ஒரு கலம் அளவு செப்புக் காசுகளை உருக்கி செய்யப்பட்ட பிள்ளையார் என்பதால் கலக்காசு பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

மேலும், ஐயாறப்பர் கோயிலிலுள்ள ஓலமிட்ட வினாயகர், ஆதிவினா யகர், இரட்டை வினாயகர் மற்றும் பிரகார வினாயக ர்களுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம்மற்றும் ஆராதனைகள் நடந்தது.

திருவையாறு மேட்டு த்தெரு அபீஷ்ட வரத வினாய கருக்கு சந்தணக் காப்பிலும், வடம்போக்கித் தெரு அக்காசாலைகம்மாள வினாயகருக்கு வெள்ளிக் கவசத்திலும், மேலவீதி சக்தி வினாயகர் சிறப்பு அலங்காரத்திலும், வாத்தலையம்மன் கோயில் வினாயகர்சந்தனக் காப்பிலும் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்கள்.

Tags:    

Similar News