கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய்இடையாறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலிகளில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.