உள்ளூர் செய்திகள்

சிறப்பு தூய்மை பணி முகாம்

Published On 2022-09-04 06:16 GMT   |   Update On 2022-09-04 06:16 GMT
  • கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடை பெற்றது.
  • லும் அவர்கள் பஸ்நிலைய தூண்களை சுத்தம் செய்யும் பணி களையும் மேற்கொ ண்டனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடை பெற்றது. இதில் நகராட்சி ஆணை யாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகி த்தார். நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 30 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பஸ் நிலைய மையப் பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தில் வளர்ந்துள்ள செடி, கொடி களை அகற்றி தூய்மை ப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள் பஸ்நிலைய தூண்களை சுத்தம் செய்யும் பணி களையும் மேற்கொ ண்டனர். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பூங்கொடி, தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருள் பிரசாத், அருள், காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News