உள்ளூர் செய்திகள்

தருமபுரி கோட்டை பெருமாள் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு

Published On 2023-09-28 15:37 IST   |   Update On 2023-09-28 15:37:00 IST
  • மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று வருகிறது.
  • ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

 தருமபுரி நகரில் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 23-ந் தேதி முதல் புரட்டாசி சனிக்கிழமையொட்டி பரவாசுதேவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராள மான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து புரட்டாசி மாத 13-வது நாளான 2-வது சனிக்கிழமையையொட்டி வருகிற 30-ந் தேதி மதியம் 12.30 மணியளவில் மூலிகை வர்ண கலாபங்களுடன் மூலவரான பரவாசுதேவ பெருமாளுக்கும், விசேஷ சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பின்னர் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநி–லையத்துறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News