உள்ளூர் செய்திகள்
முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
- சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு துளசி மாலையும், எலுமிச்சம்பழ மாலை மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் தருமபுரி சுற்று வட்டார பகுதியான நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, இண்டூர், தொப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.