உள்ளூர் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடந்த போது எடுத்த படம்.


மாணவிகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம்

Published On 2023-02-19 09:11 GMT   |   Update On 2023-02-19 09:11 GMT
  • பெண் குழந்தைகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
  • இந்த சிறப்பு பயிற்சி மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டாரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 8 அரசு நடுநிலைப் பள்ளிகள், 8 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகள் வெளியே போகும் பொழுதும், வரும்பொழுதும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தற்காப்பு பயிற்சிகள் அந்தந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மேற்பார்வையில், தற்காப்பு கலை பயிற்சியாளா்கள் ராம்ராஜ், இப்ராஹிம், காக்கும்பெருமாள், சர்மா, ராணி சந்திரா ஆகியோர் கராத்தே, டேக் வாண்டோ பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனா். மேலும் இந்த சிறப்பு பயிற்சி மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். தற்காப்பு கலை பயிற்சி சார்ந்த செயல்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனா்.

Tags:    

Similar News