உள்ளூர் செய்திகள்
அஞ்சலகங்களில் ஆதார் பதிவு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
- இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தலைஞாயிறு,அக்கிரகாரம் ஆகிய இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம் ,பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.