உள்ளூர் செய்திகள்

20-ந் தேதி முதல் ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூரில் நின்று செல்லும் தென்னக ரெயில்வே அறிவிப்பு

Published On 2023-07-13 08:05 GMT   |   Update On 2023-07-13 08:05 GMT
  • ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் கடலூர் துறைமுகம், சீர்காழியில் நின்று செல்லும்.
  • கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 24-ந் தேதி முதல் நின்று செல்லும்.

கடலூர்:

தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் கடலூர் துறைமுகம், சீர்காழியில் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- காரைக்கால் விரைவு ரெயில் கடலூர் துறைமுகம், சீர்காழியில் 18-ந் தேதி முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 18-ந் தேதி முதல் சீர்காழியில் நின்று செல்லும். ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 20-ந் தேதி முதல் நின்று செல்லும். கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 24-ந் தேதி முதல் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News