பண்ருட்டி அருகே விபத்து: சப்-இன்ஸ்பெக்டர் மகன் வாகனம் மோதி பலி
- கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் ஆபீசர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தழகன்.
- விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் ஆபீசர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தழகன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் பரமகுரு (வயது30). இவர்சென்னை பெங்களூர் ஆகிய இடங்களில் கேபிள் நடத்தி வந்தார்.
இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வடலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டைஎன்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமகுரு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவரது உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகின்றனர்.