கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
- ராணுவ வீரர் பிரபுவின் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- பிரபுவின் கொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரே ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் ராணுவ வீரர் பிரபுவின் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் டாக்டர் வேதாபிரகாஷ், விநாயகமூர்த்தி, அருள்நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் பிரிகேடியர் ரவி முனுசாமி கண்டன உரையாற்றினார். அப்போது, பிரபுவின் கொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது ராணுவ வீரர் பிரபுவின் கொலையில் கைது செய்யப்பட்டு ள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து உடனடியாக குற்றவாளிகள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் வேலுமணி, பெருமாள், நாகராஜ், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.