உள்ளூர் செய்திகள்
முதியவரின் உயிரை பறித்த புகை பழக்கம்
- பீடி பற்ற வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது.
- துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தாசிரிபள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). விவசாயி. இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
நொடிக்கொருமுறை பீடி பற்ற வைத்தவாறே இருப்பாராம். கடந்த 26-ந்தேதி அதிகாலை எழுந்த துரைசாமி வழக்கம்போல பீடி பற்ற வைத்துள்ளார்.
பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. அந்த பீடியில் இருந்த தீக்கங்கு அருகே கிடந்த தென்னை ஓலைகளில் பற்றி துரைசாமி மீதும் தீப்பற்றியது.
இதில் உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.