உள்ளூர் செய்திகள்

மகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-06-19 08:18 GMT   |   Update On 2023-06-19 08:18 GMT
  • மகளுடன் இளம்பெண் மாயமானார்.
  • சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள எம்.ேவலன்குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 3 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்யா சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.

சம்பவத்தன்று மகளை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சவுந்தர்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின்பேரில் தாலுகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் கரும்பு விற்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை போலீசார் மீட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து தமராக்கி கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News