உள்ளூர் செய்திகள்

மாணவர் பேரணி

யோகா தின பேரணி

Published On 2022-06-23 09:49 GMT   |   Update On 2022-06-23 09:49 GMT
  • சிவகங்கையில் யோகா தின பேரணி நடந்தது.
  • பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கையில் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோகாதின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்முகராஜா கலையரங்கம் முன்பாக தொடங்கி பேருந்து நிலைய பகுதிகள் வரை நடைபெற்ற பேரணியில் பள்ளியின் நன்மாணாக்கர் சான்று பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆரோக்கியதேவி, சிவகலா, பௌமியா, சர்மிளா மற்றும் நகர்ப்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதிலிங்க போஸ் தலை மையில் ஜெயபாலன், ராஜ்குமார், முத்தையா, ஆனந்தகுமார் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு வழங்கி பேரணியினை சிறப்பாக நடத்தினர்.

பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தியாகராசன், அனிதா, சுரேஷ்கண்ணன், அகிலாண்டேசுவரி, பாண்டியராஜன், சந்திரலேகா, முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News