உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2023-10-26 09:14 GMT   |   Update On 2023-10-26 09:14 GMT
  • மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
  • நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News