உள்ளூர் செய்திகள்

மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைப்பு

Published On 2023-04-01 08:48 GMT   |   Update On 2023-04-01 08:48 GMT
  • மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL1, FL2, FL3, FL3A, FL3AA, Fl4A உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களையும் மேற்கண்ட தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News