உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

Published On 2022-08-25 05:48 GMT   |   Update On 2022-08-25 05:48 GMT
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு கருத்தரங்கம் நடந்தது.
  • திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யில் தமிழக அரசின் தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கை நடத்தியது.

திட்ட ஒருங்கி ணைப்பாளர் நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சருகனி, இதயா கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கி ணைப்பாளர் ஜெயந்தி மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் கடன் உதவி நிறுவனங்கள் குறித்து பேசினர்.

120 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News