உள்ளூர் செய்திகள்

நில உரிமையாளருக்கு தெரியாமல் மணல் கடத்தல்

Published On 2022-06-17 14:00 IST   |   Update On 2022-06-17 14:00:00 IST
  • நில உரிமையாளருக்கு தெரியாமல் மணல் கடத்துவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
  • நடவடிக்கை எடுக்காத நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சியை சேர்ந்தவர் முனியசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக முனியசாமி மானாமதுரையில் உள்ள மகன் வீட்டில் தங்கியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு தனது நிலத்தை பார்க்க சென்றபோது அவருக்கு தெரியாமல் 10 அடி ஆழத்திற்கு நிலத்தைத் தோண்டி மர்ம நபர்கள் மணல் அள்ளியது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த முனியசாமி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் அனுப்பினார். அதில் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Tags:    

Similar News