உள்ளூர் செய்திகள்

புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

Published On 2023-05-09 06:25 GMT   |   Update On 2023-05-09 06:25 GMT
  • காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

காரைக்குடி

மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

Similar News