ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா
- ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் சமுதாய பொங்கல் விழா நடந்தது. தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.
இதில் ஊராட்சி அலுவலகம் முன்பு 5 பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் தமிழரசி, மாசிலாமணி, மீனாட்சி, நேத்ரா, காளியம்மாள், கனிமொழி, பாண்டீசுவரி, வீரம்மாள், பால்ரூபதி, புவனேசுவரி, பாண்டியம்மாள், அம்பிகா, நாலுகோட்டை ஊராட்சி செயலர் சோனையா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், இணை இயக்குநர் நாராயணன், உதவிதிட்ட அலுவலர்கள் அன்புராஜ், குபேந்திரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.