உள்ளூர் செய்திகள்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு

Published On 2023-10-31 06:56 GMT   |   Update On 2023-10-31 06:56 GMT
  • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
  • சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.

சிவகங்கை

சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News