உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளி மூச்சுதிணறி சாவு

Published On 2023-02-23 09:58 GMT   |   Update On 2023-02-23 09:58 GMT
  • சிங்கம்புணரி அருகே வடமாநில தொழிலாளி மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார்.
  • எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான லைனில் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரும்பு குழாய்களை இணைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை இதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தது. 12 மீட்டர் நீளம் கொண்ட இரும்பு பைப்பின் உள்ளே சென்று அதனை இணைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த தேபாப்ரட்டா ஹால்டர் (வயது 31) என்ற தொழிலாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த எஸ் வி மங்கலம் போலீசார் இறந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News