உள்ளூர் செய்திகள்

இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு

Published On 2022-06-18 08:30 GMT   |   Update On 2022-06-18 08:30 GMT
  • இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் எப்படி இறந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (வயது26) இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

இதுபற்றி பிரியங்காவின் தந்தை எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா எப்படி இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியங்கா திருமணமான 6 ஆண்டுகளில் இறந்து விட்டதால் இது தொடர்பாக தேவகோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News