உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் மீலாது நபி மாநாடு

Published On 2022-09-05 08:27 GMT   |   Update On 2022-09-05 08:27 GMT
  • திருப்பத்தூரில் மீலாது நபி மாநாடு நடந்தது.
  • திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆண்டுதோறும் மீலாது நபி மாநாடு நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு மாநாடு திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

3 அமர்வுகளாக நடந்த இந்த மாநாட்டில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சமூக ஆசிரியை சபரிமாலா என்ற பாத்திமா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். விழா ஏற்பாடுகளை மீலாது நபி மாநாடு கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News