உள்ளூர் செய்திகள்

ராதை- கிருஷ்ணர் வேடத்தில் பங்கேற்ற குழந்தைகள்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2022-08-20 08:13 GMT   |   Update On 2022-08-20 08:13 GMT
  • மானாமதுரை சுந்தரவிநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
  • குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. இதில் தவழும் கிருஷ்ணர் அலங்கரித்து வெண்ணெய் வைத்து வழிபாடு, பூஜை நடந்தது.

அதைதொடர்ந்து சுந்தரவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள சுமார் 150 குழந்தைகள் ராதை- கிருஷ்ணர் வேடங்களில் வந்து வழிபாடு செய்தனர்.

ராதை-கிருஷ்ணர் வேடங்களில் கோவிலுக்கு வந்த குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இரவு கோவில் முன்பு கோலாட்டம் நடந்தது.

இதேபோல் மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில், ெரயில்வே காலனி, கொன்னக்குளம், புலிக்குளம், வன்னிக்குடி, தெ.புதுக்கோட்டை, வேம்பத்தூர், வேதியேரேந்தல், செய்களத்தூர், சிப்காட், மாங்குளம் ஆகிய கிராம பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

Tags:    

Similar News