உள்ளூர் செய்திகள்

கிடா வெட்டு திருவிழா

Published On 2023-06-04 08:15 GMT   |   Update On 2023-06-04 08:15 GMT
  • கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
  • கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருஞ்சி வலையபட்டி கிராமத்தில் கரந்தமலை கருப்பர், வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா திருவிழா நடந்தது. முன்னதாக 2-ந் ேததி மது எடுப்பு விழா நடந்தது.

தொடர்ந்து மறுநாள் அருகருகே அமைந்துள்ள கருப்பருக்கும், வீரமாகாளிக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வாளுக்கு வேலி வகையறா சார்பில் நேர்த்திக்கடனாக 9 கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து உபச்சார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.

இப்பகுதியில் பிறந்து திருமணம் முடித்துச் சென்ற பெண்கள் இங்கு வந்து சேவல், கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முடிவில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாளுக்கு வேலி வகையறா பங்காளிகள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News