உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

Published On 2023-02-26 09:14 GMT   |   Update On 2023-02-26 09:14 GMT
  • காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
  • வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், அமுதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுபதி, கணேசன், மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News