உள்ளூர் செய்திகள்

பரலோக அன்னை ஆலய தேர் பவனி

Published On 2023-08-16 08:43 GMT   |   Update On 2023-08-16 08:43 GMT
  • பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
  • இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பெரியநாயகிபுரம் கிராமத்தில் பரலோக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி நடந்தது. பங்கு தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை வகித்தார். கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் அன்னைக்கு ஜெப நிகழ்ச்சி, திருப்பலி நடந்தது. நிறைவு நாளில் தேர் பவனி நடந்தது.

திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News