உள்ளூர் செய்திகள்

ராஜுக்குட்டி.

அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை பலி

Published On 2022-06-23 09:45 GMT   |   Update On 2022-06-23 09:45 GMT
  • மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலியானார்.
  • இவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்.

சிவகங்கை

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜுக்குட்டி. இவர் மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள மனக்கரையை சேர்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்தபின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க மதுரையில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ராஜுக்குட்டி சிவகங்கை நோக்கி சென்றார்.

அவர் நல்லாகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூவந்தி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிவகங்கை பகுதியில் பொதுமக்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News