உள்ளூர் செய்திகள்

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா

Published On 2022-09-07 08:08 GMT   |   Update On 2022-09-07 08:08 GMT
  • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
  • முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார்.

முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குநர் ஷபினுல்லாகான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆகியோர் பேசினர்.

இதில் ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், அப்துல் சலீம், உஸ்மான் அலி மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணைமுதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News