உள்ளூர் செய்திகள்

இரட்டை கொலையில் சம்பந்தப்பட்டகுற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்

Published On 2023-03-19 08:58 GMT   |   Update On 2023-03-19 08:58 GMT
  • இரட்டை கொலையில் சம்பந்தப்பட்டகுற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
  • அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய்- மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. துரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் இரட்டை கொலையில் தொடர்புடையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் 2 மாதங்களுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை மற்றும கொள்ளை சம்பவத்தில் ெதாடர்புடையவர்கள் என்று வெள்ளைச்சாமி, ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கொள்ளை யர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் இரட்டை கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும் கைதான கொள்ளையர்கள் இந்த கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி அறிந்த கண்ணங்கோட்டை கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை திசைதிருப்பக் கூடாது என்று கூறினர்.

இதுதொடர்பாக டி.ஐ.ஜி. துரையிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கு ெதாடர்பு இல்லை. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய்- மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. துரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் இரட்டை கொலையில் தொடர்புடையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் 2 மாதங்களுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை மற்றும கொள்ளை சம்பவத்தில் ெதாடர்புடையவர்கள் என்று வெள்ளைச்சாமி, ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கொள்ளை யர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் இரட்டை கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும் கைதான கொள்ளையர்கள் இந்த கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி அறிந்த கண்ணங்கோட்டை கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை திசைதிருப்பக் கூடாது என்று கூறினர்.

இதுதொடர்பாக டி.ஐ.ஜி. துரையிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கு ெதாடர்பு இல்லை. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News