உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம்

Published On 2023-05-27 07:47 GMT   |   Update On 2023-05-27 07:47 GMT
  • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்குசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம் நடத்தினர்.
  • 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள்.

மானாமதுரை

உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள். இதன் ஒரு குழுவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீரையா தலைமையில், செயலாளர் சேதுராமன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நடைபயண நோக்கங்களை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் பேசினார்.

Tags:    

Similar News