உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு

Published On 2022-09-18 08:09 GMT   |   Update On 2022-09-18 08:48 GMT
  • நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
  • இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.

இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. 

Tags:    

Similar News