உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவி ஒருவருக்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் பரிசு வழங்கியபோது எடுத்தபடம்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

Published On 2023-08-28 05:25 GMT   |   Update On 2023-08-28 05:25 GMT
  • காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
  • இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள மானகிரி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளை–யாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந் திய கிரிக்கெட் வீரர் நடரா–ஜன் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்ட விளை–யாட்டு மற்றும் இளை–ஞர் நலன் அலுவலர் ரமேஷ் கண்ணன் கௌரவ விருந்தி–னராக கலந்துகொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

விழாவையொட்டி நடை–பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு சிறப்பு பரிசினை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார். பெற்றோர்க–ளுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. விழாவில், கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுகையில், கடின உழைப்பபை பின்பற் றினால் வாழ்வில் எத்துறை–யிலும் சாதிக்கலாம் என்றும், விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உடல் ஆரோக்கியத்தை கவ–னமாக பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் விளையாட்டு துறைக்கு உடலே மூலதனம், நேரம் தவறாமை, ஒழுக்கம், கடின உழைப்பு இவை மூன்றும் ஒரு மனிதனை உயர்த்தும் செயல்பாடுகள். திறமை இருந்தால் எந்த மூலையில் இருந்தாலும் உலகப்புகழ் பெறலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். வாழ்வில் கஷ் டப்பட்டால் மட்டுமே வெற்றி நிலைக்கும் எனவும் மாணவர்களுக்கு ஆர்வமூட் டூம் வகையில் பேசி–னார்.

பள்ளியின் சேர்மன் குமரேசன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், புகழ்பெற்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அப்புகழைப் பெற மாணவர்கள் பெரும் முயற் சியை மேற்கொள்ள வேண் டும் என்றார்.பள்ளியின் துணை சேர்மன் அருண் குமார் பேசும்போது, எந்த துறையில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் உங்களின் பணிவே உங்களை சமுதா–யத்தில் உயர்த்தும் என்றார். பள்ளியின் முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை வழங் கினார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறி–னார். நிகழ்ச்சியில் மாண–வர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலு–வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News