உள்ளூர் செய்திகள்

பாலத்தில் கார் மோதல்; ஆசிரியர் படுகாயம்

Published On 2022-10-11 07:46 GMT   |   Update On 2022-10-11 07:46 GMT
  • பாலத்தில் கார் மோதியதால் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.
  • மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணி வருபவர் ஜான் பெஸ்டர்ட். இவர் சிவகங்கையில் இருந்து பள்ளிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஜான் பெஸ்டர்ட் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சண்முகம், காவலர் வீரபாண்டியன் ஆகியோர் காயமடைந்த ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News