உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2023-08-22 07:39 GMT   |   Update On 2023-08-22 07:39 GMT
  • தேவகோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
  • கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் சென்று முடிவடைந்தது.

தேவகோட்டை

தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் வீட்டுக்கு வீடு சோலார் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் வரவேற்றார். மாரத்தான் தியாகிகள் பூங்கா தொடங்கி திருப்பத்தூர் சாலையில் வழியாக ராம் நகர் கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் முடிவடைந்தது. இப்போ போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளை மருத்துவர் சிவகுமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News