உள்ளூர் செய்திகள்

இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

Published On 2022-07-03 11:36 GMT   |   Update On 2022-07-03 11:36 GMT
  • வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
  • முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.

தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.

இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News