உள்ளூர் செய்திகள்
75-வது சுதந்திர தினவிழா: ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் தேசியக்கொடிைய ஏற்றி, ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- றப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்கள் 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.