உள்ளூர் செய்திகள்

சங்கரய்யா மறைவையொட்டி சிவகிரியில் மவுன அஞ்சலி ஊர்வலம்

Published On 2023-11-17 08:42 GMT   |   Update On 2023-11-17 08:42 GMT
  • அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
  • வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

சிவகிரி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News