உள்ளூர் செய்திகள்
காடையூரான்வலசில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இன்று முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசில் உள்ள சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையொட்டி நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி நேற்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது .
இன்று சனிக்கிழமை முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக ஏற்பாடுகளை காடையூரான்வலசு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.