உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் எஸ் ஐ ஜெயஸ்ரீ

Published On 2023-08-31 10:28 GMT   |   Update On 2023-08-31 10:28 GMT
  • தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பொன்னேரி:

மீஞ்சூர் சூர்யாநகர் ஸ்ரீ மதி கங்காதேவி பஜ்ரங்கதலால் சோக்கானி விவேகானந்தா வித்யாலையா மேல் நிலை பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் மாணவர்களுக்கு பழங்காழ பாரம்பரிய விளையாட்டுகளின் பயன்கள் குறித்தும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News