உள்ளூர் செய்திகள்

 பக்தர்கள் மாவிலக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி.

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-06-01 10:23 GMT   |   Update On 2023-06-01 10:23 GMT
  • பெருமாள் சாமியை தோலில் சுமந்து கொண்டு ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள வீர கவுண்டனூர் கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு சக்தி மாரியம்மன், காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கிராம மக்கள் அனைவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் மற்றும் பெருமாள் சாமியை தோலில் சுமந்து கொண்டு ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.

இதனையடுத்து பம்பை, மேளதாளம், வானவேடிக்கை முழங்க கடத்தூர் காளியம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வீர கவுண்டனூர் எடுத்துச் சென்றனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து சாமியை வழிபட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News