உள்ளூர் செய்திகள்

கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-மருந்து விற்பனை பிரதிநிதி கைது

Published On 2022-11-26 14:58 IST   |   Update On 2022-11-26 14:58:00 IST
  • அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
  • பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன 47 வயதுடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கோவை,

கோவை குனியமுத்துரைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பேராசிரியையின் கணவர் வாகன விபத்தில் பலியானார். அப்போது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன 47 வயதுடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் 2 பேரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மருந்து விற்பனை பிரதிநிதி 2 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 16 வயது மகளுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதனை அடுத்து பேராசிரியை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து 2-வது மனைவியின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருந்து விற்பனை பிரதிநிதியை கைது செய்தனர் .

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியை அனைத்து மகளிர் போலீசில் மேலும் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மருந்து விற்பனை பிரதிநிதி வெவ்வேறு கால கட்டங்களில் தன்னிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News