உள்ளூர் செய்திகள்

நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

Published On 2023-02-10 14:52 IST   |   Update On 2023-02-10 14:55:00 IST
  • நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
  • சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் அரக்கோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News