உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்.

பொம்மிடி சீனிவாசா பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Published On 2023-07-19 09:35 GMT   |   Update On 2023-07-19 09:35 GMT
  • பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி சீனிவாசா பொறியியல் கல்லூரியில் "பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் கவுரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோவன் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் ரேவதி இளங்கோவன் தலைமை தாங்கினர்.

விழாவில் கல்லூரியின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் நந்தகோபால் மற்றும் நிர்வாக இயக்குனர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபு, எக்ஸ்செல் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர், முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்

மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து

இருந்தனர்.

Tags:    

Similar News