உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2022-06-25 10:09 GMT   |   Update On 2022-06-25 10:09 GMT
  • சேலத்தில் கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கனிமவள துறை தனிவருவாய் ஆய்வாளர்கள் ராஜாராமன், கவுதமன் மற்றும் உதவி புவியியாளர் பிரசாத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சேலம்:

சேலம் மாமாங்கம் அருகே கனிமவள துறை தனிவருவாய் ஆய்வாளர்கள் ராஜாராமன், கவுதமன் மற்றும் உதவி புவியியாளர் பிரசாத் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

அந்த லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர், இந்த சோதனையில் அரசு அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது, இதனையடுத்து லாரி டிரைவர் மாதேஸ்வரன் (வயது42 ) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் கிரானைட் கற்களை கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், மேலும் இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News